Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! ராதாரவி அறிவிப்பு

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (15:38 IST)
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!
சமீபத்தில் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. எஸ்பிபி நினைவை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், தாதா சாகேப் விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் புதுவை முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ அமைக்கப்படும் என நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற டப்பிங் யூனியன் செயற்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
 
டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.
 
மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments