Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' சென்சாரை திரும்ப பெற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (18:08 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு பாஜகவினர் பிரச்சனை கொடுக்க கொடுக்க அந்த படத்தின் வசூல் எகிறிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் மெர்சல்' படத்தின் சென்சாரை திரும்ப பெற கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 
 
'மெர்சல்' படத்தில் இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே அந்த படத்திற்கு வழங்கப்பட்ட சென்சாரை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்
 
மேலும் அயல்நாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வசனம் பேசிய விஜய், சமந்தா உள்பட இந்த படத்தில் பணிபுரிந்த 10 பேர்களின் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments