Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

89 சுருங்கி 13 ஆனது - ஏ சான்றிதழ் பெற்ற உத்தா பஞ்சாப்

89 சுருங்கி 13 ஆனது - ஏ சான்றிதழ் பெற்ற உத்தா பஞ்சாப்

89 சுருங்கி 13 ஆனது - ஏ சான்றிதழ் பெற்ற உத்தா பஞ்சாப்
, செவ்வாய், 14 ஜூன் 2016 (18:39 IST)
அனுராக் காஷ்யபின் பேண்டம் பிலிம்ஸ் தயாரித்த உத்தா பஞ்சாப் படத்தை தடை செய்ய தேவையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தணிக்கை வாரியம் கலகலத்து போயுள்ளது.



89 இடங்களில் கத்திரி போட வேண்டும் என்பவர்கள் 13 இடங்களில் காட்சிகளை வெட்டினால் போதும் என்று இறங்கி வந்துள்ளனர். அத்துடன் படத்துக்கு ஏ சான்றிதழும் தந்துள்ளனர்.
 
உத்தாப் பஞ்சாப் படத்தின் பெயரில் உள்ள பஞ்சாபை நீக்கியாக வேண்டும் என்று தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானி ஒற்றைக்காலில் நின்றார். நீதிபதிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு நான் அப்படி சொல்லவே இல்லை என்று பல்டியடித்துள்ளார். 
 
அனுராக் காஷ்யப் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தணிக்கை வாரியத்தின் இந்த 13 வெட்டுகளை ஒப்புக் கொண்டு ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடலாம். அல்லது அதுவும் கூடாது என்று மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லலாம். எல்லாம் அவர்கள் கையில்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினிக்காக ஸ்லிம்மான ராய் லட்சுமி