செக்க சிவந்த வானம்: அதிகாலை காட்சி திடீர் ரத்து

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (20:16 IST)
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் ஒருசில திரையரங்குகளில் 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிம்பு மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஐந்து மணி காட்சிக்கு விறுவிறுப்பாக முன்பதிவு செய்ததால் ஐந்து மணி காட்சியின் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை காசி திரையரங்கம் நாளை திட்டமிட்டிருந்த 5 மணி காட்சியை திடீரென ரத்து செய்துவிட்டது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும் மற்ற திரையரங்குகளில் நிலை இன்னும் முடிவாகவில்லை. எனவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே அதிகாலை காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு பின் ரத்து செய்வது அடிக்கடி நிகழ்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படமும் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டு பின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments