Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளி தயாரிப்பாளர்கள் படங்களிலும் நடிப்பேன் - சக்சஸ் மீட்டில் ஜோதிகா

வெளி தயாரிப்பாளர்கள் படங்களிலும் நடிப்பேன் - சக்சஸ் மீட்டில் ஜோதிகா
, வியாழன், 28 மே 2015 (16:02 IST)
36 வயதினிலே படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சக்சஸ் மீட்டை ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா. அகரம் பவுண்டேஷன் சார்பில் 25 பெண்களுக்கு தொழில்முனைய உதவி என்று இன்ஸ்டன்ட் நற்பணி.
தான் நடிக்கும் படத்துக்குத் தகுந்தபடி பேசுகிறவர் சூர்யா. 36 வயதினிலே பெண்களின் முன்னேற்றம் குறித்த படம். கணவன்கள் தங்கள் மனைவிகளின் விருப்பம் அறிந்து அதனை நிறைவேற்ற உதவ வேண்டும் என்றார். கடந்த எட்டு வருடங்களாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஜோதிகாவுக்கு இருந்துள்ளது. என்னிடம் சொல்ல தயக்கம். எட்டு வருடங்களுக்குப் பிறகே அவரது விருப்பம் எனக்கு தெரிய வந்தது என்றார்.
 
ஜோதிகாவின் விருப்பத்தை நிறைவேற்றியதால் சூர்யாவுக்கு கோடிக்கணக்கில் லாபம். நம்ம பொண்டாட்டிங்க விருப்பமெல்லாம் நம்ம பர்ஸை காலி பண்றது மாதிரியில்ல இருக்கு என்று புலம்பினார் ஒரு நிருபர். சரிதான். ரோஷன் ஆண்ட்ரூஸ், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற ஜோதிகாவின் வயதுக்கும் இமேஜுக்கும் ஏற்ற ஒரு படத்தை எடுத்திருக்காவிடில் சூர்யாவுக்கு இப்போதும் அவரது விருப்பம் தெரியாமலேதான் இருந்திருக்கும். 
 
சக்சஸ்மீட்டில் பேசிய ஜோதிகா, என்னுடைய கணவரின் தயாரிப்பில் இப்போது நடித்திருக்கிறேன். இனி நல்ல கதைகள் அமைந்தால் வெளி தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிப்பேன் என்றார். ஜோதிகாவின் கொள்கையை - நல்ல கதையுள்ள படத்தில் மட்டுமே நடிப்பேன் - சூர்யாவும், கார்த்தியும் பின் பற்றினால் அலெக்ஷ் பாண்டியன், அழகுராஜா, அஞ்சான் போன்ற அறுவைகளிடமிருந்து ரசிகர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil