Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

34 வருடங்களுக்கு பின் தொலைக்காட்சிக்கு வரும் ஏ.ஆர்.ரஹ்மான்

34 வருடங்களுக்கு பின் தொலைக்காட்சிக்கு வரும் ஏ.ஆர்.ரஹ்மான்
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (11:51 IST)
34 வருடங்களுக்கு முன் 1980 -இல் வொண்டர் பலூன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஹ்மான் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு செலிபிரிட்டியாக தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்து கொண்டாரே தவிர, நடிக்கவோ, இசையமைக்கவோ இல்லை. இந்திப்பட இயக்குனர் அஷுவதோஷ் கவாரிகர் எழுதி, தயாரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார். 
அஷுவதோஷ் எவரெஸ்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்கிறார். நிகழ்ச்சியை வடிவமைத்து எழுதியிருப்பவரும் அவரே. அந்த நிகழ்ச்சிக்கான தீம் பாடலை ரஹ்மான் சமீபத்தில் கம்போஸ் செய்தார். நிகழ்ச்சியின் பின்னணி இசையும் ரஹ்மான்தான்.
 
அஷுவதோஷின் லகான், ஜோதா அக்பர், ஸ்வதேஸ் படங்களுக்கு ரஹ்மான்தான் இசை. விரைவில் அவர் தொடங்கயிருக்கும் மொகஞ்சதாரோ படத்துக்கும் ரஹ்மானே இசையமைக்க உள்ளார். தனது இசைக்கு நியாயம் செய்த இயக்குனர் என்பதாலும், நிகழ்ச்சியின் கான்செப்ட் பிடித்திருந்ததாலும் எவரெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதாக ரஹ்மான் கூறியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil