Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு 22 படங்கள்- அதிர வைக்கும் கோலிவுட்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (11:48 IST)
பெரிய படங்கள் நினைத்த நேரத்தில் வெளியிடுவதால் சிறிய படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.



இது தொடர்பாக சிறிய பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். இதனால்  வாரம் தோறும் தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. வருகிற 14-ந்தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, புதிய பிரபஞ்சம், துலாம், பிரபு, திரு, ஓடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
வருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.பொங்கல் பண்டிகையில் பேட்ட, விஸ்வாசம் படம் மட்டுமில்லாமல், 22 படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதனால் தியேட்டர்களை  பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments