Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2015-ல் சிங்கம் 3 - சுறுசுறுப்பு காட்டும் ஹரி

2015-ல் சிங்கம் 3 - சுறுசுறுப்பு காட்டும் ஹரி
, செவ்வாய், 29 ஜூலை 2014 (13:19 IST)
சிங்கம் 3 வருமா என்ற கேள்விக்கு ஒய் நாட்? என்று பாஸிடிவான பதிலை சமீபத்தில் தந்தார் சூர்யா. இது சும்மா மேடைப் பேச்சல்ல. சூர்யாவின் மார்க்கெட்டை சி சென்டரில் ரிவிட் அடித்து பதிய வைத்த படம் சிங்கம். அதனை சிங்கம் 2 பலப்படுத்தியது.
கதை அமைந்தால் அடுத்த வருடமே சிங்கம் 3 ஆரம்பிக்கப்படலாம் என்று அப்போது சூர்யா தெரிவித்தார். ஹரிக்கு இது போதாதா?
 
அவரது கதை இலாகாவில் ஏற்கனவே சிங்கம் 3 -க்கான கதைகள் தயார். அதில் ஒரு நான்கை சூர்யாவிடம் அவர் கூறியதாகவும், சூர்யா ஒன்றை டிக் செய்திருப்பதாகவும், அதற்கு திரைக்கதை அமைக்கும் பணி நடப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
ஹரி தனது கதையிலாகாவில் கதை எழுதவும், சீன் எழுதவும் பயன்படுத்தும் உதவி இயக்குனர்களை படப்பிடிப்பு தளத்தில் அனுமதிப்பதில்லை. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களுக்கு கதை இலாகாவில் அனுமதியில்லை. ஹரியின் கமர்ஷியல் சக்சஸுக்கும், அவர் இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்தப் படங்களை உடனே ஆரம்பிப்பதற்கும் இதுதான் முக்கிய காரணம்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil