அறிமுக நாயகன், நாயகி என எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட கதாநாயகர்களும், கிட்டத்தட்ட நூரை நெருங்கும் அளவுக்கு கதாநாயகிகளும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
அதேபோல இயக்குனர்களின் எண்ணிக்கையும் கூடுதல்தான். அப்படி அறிமுகமான ஒரு சிலர் மட்டுமே அடுத்த பட வாய்ப்பை பெற்றிருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் தேடல்களில் இருக்கிறார்கள். நல்ல கதையுள்ள படங்களால் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும் என்பதுதான் முற்றிலும் உண்மை.