Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தில் 20 பெண் அமைச்சர்கள்!!! - கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (19:14 IST)
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற வேண்டி திராவிட கட்சிகளுடன் ரஜினியின் புதிய கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில், துணைமுதல்வர்  ஒ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.#kamalhasan #makkalneedhimayyam

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments