Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’பேய்க்கு மவுசு அதிகம்’

’பேய்க்கு மவுசு அதிகம்’
, புதன், 21 மே 2014 (13:24 IST)
மொத்தம் 21 முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கும் கலகலப்பும், காமெடியுமாக வெளிவர இருக்கிறது ‘அரண்மனை’. இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் முதல் பேய் படம் இது. 
‘இன்றைக்கு பேய் பற்றிய படங்கள் நன்றாக ஓடுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சந்திரமுகி’, ‘பீட்சா’, ’காஞ்சனா’ தற்போது ’யாமிருக்க பயமே’ போன்ற படங்கள் நன்றாகத்தான் ஓடியது. அந்த வரிசையில் ’அரண்மனை’ யும் வெற்றிபெறும். 
 
இன்னும் சொல்லப் போனால் பேயை வைத்து காமெடி பண்ணியிருக்கிறேன். பாழடைந்த பங்களா ஒன்றை அந்த குடும்பத்தினர் விற்க முயற்சிக்கின்றனர். 
 
அதை யாரெல்லாம் வாங்க வருகிறார்கள். விற்க முயற்சி செய்யும் போது அந்த பங்களாவில் என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்பதுதான் கதை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று நாயகிகள் இதில் நடித்திருக்கிறார்கள். மூவருக்குமே வித்தியாசமான கதாபாத்திரங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் ‘அரண்மனை’ பிடிக்கும்’ என்கிறார் சுந்தர்.சி.
 

Share this Story:

Follow Webdunia tamil