Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மீ‌ண்டு‌ம் அமர்க்களம் கொண்டாட்டம்

‌மீ‌ண்டு‌ம் அமர்க்களம் கொண்டாட்டம்
, செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (18:12 IST)
1999ல் அஜீத் நடிப்பில் சரண் இயக்கத்தில் அமர்க்களம் வெளிவந்தது. அஜீத்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இது. திரையிலும், நிஜத்திலும்.
இந்தப் படத்தில் ஷாலினியுடன் நடிக்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு காட்சியில் ஷாலினியின் கையை அஜீத் கிழித்துவிட்டார். படத்தின் கிளைமாக்ஸ் ரோலை ஷாலினி எடுத்துவர, அவரைத் தொடர்ந்து ஷாலினியின் வீட்டிற்கு வரும் அஜீத் கத்தியை வைத்து கிளைமாக்ஸ் ரோலை கேட்டு மிரட்டும் காட்சி நினைவிருக்கிறதா?
 

அதில் நிஜமாகவே கத்தி ஷாலினியின் கையை கிழித்துவிட்டது. சின்ன காயம்தான். ஆனால் அஜீத் பதறிப் போய் அந்த காயத்துக்கு செய்த முதலுதவி ஷாலினியை கவர்ந்தது. அப்படிதான் அவர்களின் காதலுக்கான முதல் விதை விழுந்தது. படம் முடியும் போது அதில் பந்தல் கட்டி இருவரும் ஊஞ்சலாடும் அளவுக்கு வளர்ந்தது.
 
அப்படி அஜீத், ஷாலினிக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அப்படம் வெளியாகி வரும் மே 1 15வருடங்கள் நிறைவு பெறுகிறது. மே 1 அஜீத்தின் பிறந்தநாள்.
 
அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் மீண்டும் அமர்க்களம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 
 
சத்தம் இல்லாத தனிமை கேட்டேனை ஆரவாரத்தோடு திரையரங்கில் ரசிக்க அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. என்ஜாய்.

Share this Story:

Follow Webdunia tamil