Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மீண்டும் பெரிய திரைக்கு வருவேன்

‌மீண்டும் பெரிய திரைக்கு வருவேன்
, வெள்ளி, 23 மே 2014 (19:40 IST)
தற்போது சின்னத் திரையில் சீரியல்கள் இயக்கிக் கொண்டிருப்பது தற்காலிக இடைவெளிதான். மீண்டும் பெரிய திரையில் அதிரடியாக களம் இறங்குவேன் என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. 
 
இவரது திறமைக்கு சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா படங்களே போதும். தற்போது திரைப்படம் எதுவும் இயக்காமல் சின்னத் திரையில் தொடர்களை இயக்கி வருகிறார். சின்னத்திரை என்றாலும், நீங்கள் நினைப்பது போல் சுலபமான காரியம் இல்லை. சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. ஒரு இரண்டு மணி நேர சினிமாவை சுவரஸ்யமாக கொடுப்பது வேறு. ஆனால், தொடர்களில் ஒவ்வொரு வாரமும் ரசிக்கும்படி கொடுக்க வேண்டும். அதை தற்போது நிறைவாக செய்து வருகிறேன். 
 
தெலுங்கில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. தெலுங்கானா பிரச்சனையால் அது கைவிடப்பட்டது. தற்போது விரைவில் ஒரு பிரம்மாண்டமான தழிழ் படத்தை இயக்கவிருக்கிறேன் என்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil