Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாரர் படம், அறிமுக இயக்குனர்... நயன்தாராவின் துணிச்சல் முடிவு

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2014 (18:59 IST)
அனாமிகா (தமிழில் நீ எங்கே என் அன்பே) நடித்த பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இதுபோன்ற படங்களில் இனி நடிக்கப் போவதில்லை. ஹீரோயின் ஓரியண்ட் படங்களில் மொத்தப் படத்தையும் நாம்தான் சுமக்க வேண்டியிருக்கிறது என்றார் நயன்தாரா. அவரது உறுதியை ஒரு அறிமுக இயக்குனர் குலைத்திருக்கிறார்.
எஸ், மீண்டும் ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படத்தில் அவர் நடிக்கிறார்.
 
அஸ்வின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுவொரு ஹாரர் படம். இதில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதை நயன்தாராவை மையப்படுத்தியது. நெடுஞ்சாலையில் நடித்த ஆரிக்கு முக்கிய வேடம். யுத்தம் செய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யா இந்த ஹாரர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
அடுத்த வாரமே படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
 
தற்போது சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், உதயநிதியுடன் நண்பேன்டா ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். வெங்கட்பிரபு, சூர்யா இணையும் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments