உருப்படாதப் படங்களை உற்பத்தி செய்கிறவர் ஷக்தி சிதம்பரம். இவரது ராஜாதிராஜ ா அல்லது குரு சிஷ்யன் படங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்த்தால் போதும். உருப்படாத என்பதன் பொருள் தெளிவாகிவிடும். ஆட்சி மாறிய பிறகு கோடம்பாக்கத்தில் நாய்ஸ் பொல்யூஷன் ஏற்படுத்தி வருகிறவர்களில் இவர் முக்கியமானவர்.
இவர் சமீபத்தில் மேற்கொண்ட புத்திசாலித்தனமான முடிவ ு, தயாரிப்புடன் தனது பணியை நிறுத்திக் கொண்டது. இவரது தயாரிப்பில் இளங்கண்ணன் ஓம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அர்ஜுன் ஹீரோ. அடுத்து ராசு மதுரவன் இயக்கும் படமொன்றை தயாரிக்கும் திட்டமும் ஷக்தி சிதம்பரத்துக்கு உள்ளது.
தயாரிப்புடன் தனது பணியை ஷக்தி சிதம்பரம் நிறுத்திக் கொண்டால் வருட இறுதியில் தமிழக மக்கள் சார்பில் பிரமாண்ட பாராட்டுவிழாவே அவருக்கு எடுக்கலாம்.