தனது விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்த நடித்த பாண்டிய நாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யுடிவி யுடன் இணைந்து நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். திரு இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். யுவன் இசை. விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரிதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
விஷாலின் சண்டக்கோழி, பாண்டிய நாடு படங்களில் ஆந்திராவில் லாபத்தை ஈட்டின. அதேபோல் ஹரியின் சிங்கம் படமும். அதனால் இருவரும் இணையும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்க உள்ளனர்.
வேறு பலரும் விஷாலிடம் கதை கூறியுள்ளனர். சில படங்களை தயாரித்து நடிக்கும் திட்டமும் விஷாலிடம் உள்ளது.
சமீபத்தில் திரைக்கு வந்த தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக்கும் விஷாலுக்காக ஒரு கதை தயார் செய்திருக்கிறார். படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தயார். விஷாலின் கால்ஷீட் மட்டும்தான் தேவை.
இந்த வருடம் அதிக திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்ற பெருமை விஷாலுக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.