Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லனும் நானே நல்லவனும் நானே

வில்லனும் நானே நல்லவனும் நானே
, வியாழன், 15 மே 2014 (14:04 IST)
அரசியல் கட்சி தலைவராக இருக்கும் சரத்குமார் அவ்வப்போது கௌரவத் தோற்றத்தில் படங்களில் நடிக்கிறார். கட்சிப் பணிகள் காரணமாக சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை என்பவர், நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாகிறார். படத்தை இயக்குவது சரத்குமாரின் ஆஸ்தான இயக்குனர் அடிதடி ஏ.வெங்கடேஷ்.
 
இந்தப் படத்துக்கு சில சிறப்புகள். தான் நடிக்கும் படங்களின் கதைகளில் தாராளமாக மூக்கை நுழைக்கும் சரத்குமார் இந்தமுறை படத்தின் கதை முழுவதையும் அவரே எழுதியுள்ளார். கதையை தீர்மானித்த பிறகே ஏ.வெங்கடேஷிடம் அதனை கூறியிருக்கிறார். கதைக்கு எக்ஸ்ட்ரா பாலீஸ் போட்டிருப்பவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இதுவரை ஏ.வெங்கடேஷின் படம் என்றால் வசனம் பட்டுகோட்டை பிரபாகராகவே இருப்பார். அது சண்டமாருதத்தில் மாறியுள்ளது.
 
புலன் விசாரணையில் வில்லனாக திரைவாழ்க்கையை ஆரம்பித்த சரத்குமார் அதேபோன்றதொரு வில்லனாக சண்டமாருதத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே.
 
படத்தில் கன்னட நடிகர் அருண் சாகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கின்றனர். சரயு, அவ்னி மோடி என்று இரு ஹீரோயின்கள். சரத்குமாரின் திருப்புமுனை படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

Share this Story:

Follow Webdunia tamil