உதவி இயக்குனராக இருந்து நடிகரானவர் விஷால். அந்த அக்னி குஞ்சு இன்னும் அணையாமல் அவருக்குள் இருக்கிறது. திமிரு வெற்றி பெற்ற போது அக்னி குஞ்சின் ஆவேசம் அபிரிமிதமாக இருந்தது. அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியடைந்ததால் இயக்கம் பற்றி விஷால் வாயே திறக்கவில்லை. இப்போது ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார். கதை, இயக்கம் என அக்னி குஞ்சு மீண்டும் விழித்திருக்கிறது.
விஷால் தயார் செய்து வைத்திருக்கும் கதை விஜய்க்கு ஆப்டாக இருக்கிறதாம். இந்தத் தகவலை அவரே வெளியிட்டிருக்கிறார். விஜய் சம்மதித்தால் உடனே இயக்கத்தில் இறங்கிவிட தயாராக இருக்கிறாராம்.
இந்த வலையில் விஜய் சிக்குவார் என்கிறீர்களா?