நான் கடவுள் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் பூஜ ா நடிக்கவில்லை. தனது தோழியின் படம் என்பதால் நட்புக்காக துரோகிப் படத்தில் வந்து போனார்.
பூஜா திரையுலகை தலைமுழுகிவிட்டாரா? இந்த கேள்வி ஒருபுறமிருக்க, பெங்களூருவில் செட்டிலான பூஜ ா என்ஜினியர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக காஸிப் நிபுணர்கள் கதைத்தார்கள். இதற்கெல்லாம் பூஜ ா பதிலளித்தார். அவரது விளக்கம் வருமாறு.
தற்போது நான் பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். அதேநேரம் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். நான் கடவுள் படத்துக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வரவில்லை. அதனால் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
ரகசிய திருமணம் நடந்ததாகச் சொல்வதில் உண்மையில்லை. என்னுடைய தந்தை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். நானும் சர ி என்று சம்மதம் தெரிவித்துள்ளேன். ஆனால் வெளிநாட்டில் செட்டிலாகும் எண்ணமில்லை.
இந்த விளக்கத்தின் மூலம் தான் சார்ந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூஜ ா.