Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் லாரன்ஸுக்கு 1.5 கோடி ரூபாய் கொடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் !

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:17 IST)
நடிகர் லாரன்ஸின் அறக்கட்டளைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் 1.5 கோடி ரூபாய் நிதியாகக் கொடுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் வித்தகராக இருந்தாலும், அவர் செய்து வரும் சமூக சேவைகளுக்காக பொதுவெளியில் பாராட்டப்பட்டு வருகிறார். இப்போது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் லஷ்மி பாம் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார் அக்‌ஷய் குமார். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்துள்ளார். இந்த தொகை திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை நடிகர் லாரன்ஸ் வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான பூமி பூஜை நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments