Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் பிரமாண்டமாக நடக்கும் கத்தி பாடல்கள் வெளியீட்டுவிழா

லண்டனில் பிரமாண்டமாக நடக்கும் கத்தி பாடல்கள் வெளியீட்டுவிழா
, வெள்ளி, 11 ஜூலை 2014 (11:39 IST)
கத்தி படத்தின் பாடல்களை லண்டனில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தியை லைகா புரொடக்ஷனும், ஐங்கரனும் இணைந்து தயாரிக்கின்றன. லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது. ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்களுடன் இணைந்து தொழில் செய்து வரும் நிறுவனம். இது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
 
லைகா நிறுவனத்தின் எம் டியின் தாயார் லண்டனில் வசிப்பதாகவும், அவரது பிறந்தநாளில் கலந்து கொள்ள கத்தி படக்குழு - விஜய், முருகதாஸ் உள்பட - லண்டன் செல்லவிருப்பதாகவும் கடந்த இரு தினங்களாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவிக் கொண்டிருக்கிறது. இந்த லண்டன் பயணத்துக்காக லைகா குழுமத்தினர் கத்தி படக்குழுவுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இது தமிழ உணர்வாளர்கள் மத்தியில் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையில் படம் குறித்த நேர்மறையான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. படத்தின் பாடல்களை லண்டனில் வெளியிடுகிறார்கள் என்பதே அது.
 
ஒரு படத்துக்கு விளம்பரமாக அமைவது பாடல்கள் வெளியீட்டு விழா போன்ற நிகழ்வுகளே. ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை திரையரங்குக்கு இழுக்க (முக்கியமாக பிரமாண்ட ஓபனிங்குக்கு) இதுபோன்ற விழாக்கள் அவசியம். கத்தியின் பாடல்கள் வெளியீட்டு விழாவை லண்டனில் வரும் செப்டம்பர் 20 நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களுக்கும் நடனக் கலைஞர்கள் மேடையில் ஆட உள்ளனர். வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்த உள்ளனர்.
 
லைகா நிறுவனம் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வருவதால் விழாவை லண்டனில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil