Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நடிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்ட ஜோ‌திகா

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (11:44 IST)
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமலிருந்த ஜோ‌திகா மலையாளத்தில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். மீண்டும் நடிப்பதா கூடாதா என்பதை தீர்மானிக்க அவர் இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்துக் கொண்டதாக சூர்யா கூறினார்.
ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை சூர்யாவும், ஜோ‌திகாவும் சேர்ந்து பார்த்துள்ளனர். 
படம் பிடித்துப் போகவே அதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க விரும்பியுள்ளார் சூர்யா. ஜோ‌திகா நடிப்பதாக இருந்தால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் ஜோ‌திகாவிடம் கேட்டுள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து முடிவு செய்ய இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளார் ஜோ‌திகா.
 
இரண்டு தினங்களுக்குப் பிறகு அவர் நடிக்க ஓகே சொல்ல உடனடியாக ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கப்பட்டது. தனது டி2 என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறார்.
 
இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.
 
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments