Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிர்ச்சி செந்திலும் பெயரை மாற்றினார்

மிர்ச்சி செந்திலும் பெயரை மாற்றினார்
, புதன், 30 ஜூலை 2014 (19:47 IST)
நடிகைகள்தான் சீசனுக்கு ஏற்றபடி பெயரை மாற்றுவார்கள். நடிகர்கள் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்? மிர்ச்சி செந்தில் தனது பெயரை மாற்றியுள்ளார்.
 
ஆர்ஜேவாக இருந்து தொலைக்காட்சி நடிகராகி இப்போது சினிமாவில் ஹீரோவாகியும்விட்டார் செந்தில். இவரது நடிப்பில் சமீபத்தில் பப்பாளி படம் வெளியானது. மூர்த்தி இயக்கிய இப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது.
இதையடுத்து செந்தில், விஜயலட்சுமி நடித்திருக்கும் வெண்ணிலா வீடு வெளியாகிறது. ஆதர்ஷ் ஸ்டுடியா தயாரித்திருக்கும் இப்படம் தயாராகி ஒரு வருடம் ஆகிறது. வியாபாரமாகாமல் இருந்த படத்தை தி வைப்ரண்ட் மூவி வாங்கியதைத் தொடர்ந்து விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
 
கிராமத்து பெண்ணான விஜயலட்சுமி திருமணமாகி நகரத்துக்கு வருகிறார். இங்குள்ள அபார்ட்மெண்ட் கலாச்சாரம் அவரை எப்படி பாதிக்கிறது, அதன் நெருக்கடிகள் என்ன என்பதை படம் விளக்குகிறது. சமீபத்தில் ஜானி ஜானி வா மாமா என்ற பாடலை படத்தின் விளம்பரத்துக்காக வெளியிட்டனர். பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதனை படத்தில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்திலிருந்து தனது பெயரை செந்தில் குமார் என மாற்றியுள்ளார் மிர்ச்சி செந்தில். இனிவரும் படங்களிலும், செய்திகளிலும் அப்படியே பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil