மும்பை மிரர் பத்திரிகையும் நமமூர் வம்பு பத்திரிகை போலத்தான். எப்போதோ உள்ள ஆறிப்போன சாம்பாரை ஊற்றி தமிழ் பத்திரிகைகளை தப்படிக்க வைத்துவிட்டது.
இந்தப் பத்திரிகையில்தான், மருதநாயகத்தில் ரஜினி நடிப்பார் என்ற கமலின் பேட்டி வெளிவந்தது. ஆஹா, கமலின் கனவுப் படம் மீண்டும் தொடங்குகிறது என்று குதூகலமாக அனைவரும் இந்தச் செய்தியை பிரசுரித்தனர். ஆனால் இந்தப் பேட்டி ஒரு ஆறிப்போன வடை என்று ட்விட்டியிருக்கிறார் கமலின் பிஆர்ஓ நிகில் முருகன்.
எப்போதோ கமல் கொடுத்த பேட்டியை மும்பை மிரர் பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறார்கள். கமல் இப்போது விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவுள்ளார் என நிகில் முருகன் பொங்கிய பாலில் தண்ணி தெளித்துள்ளார்.
இந்த கான்ட்ரவர்ஸியால் கமலின் அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. அந்தவகையில் சந்தோஷம்.