Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளுக்காக காதல் கதையை இயக்கும் அர்ஜுன்

மகளுக்காக காதல் கதையை இயக்கும் அர்ஜுன்
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (18:25 IST)
அர்ஜுன் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் ஆக்ஷன் அடிதடிதான். முதல்முறையாக மகள் ஐஸ்வர்யாவுக்காக காதல் கதையை படமாக்குகிறார்.
நான் ரொமான்டிக் கதையை படமாக்க முயலும் போதெல்லாம் சென்னை எக்ஸ்பிரஸ் மாதிரியான ரிசல்ட்தான் கிடைக்கிறது என்றார் அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. அதாவது சுட்டு போட்டாலும் ஆக்ஷன் தவிர எதுவும் அவருக்கு வராது. அதேபோலதான் அர்ஜுனும். தற்போது அவர் இயக்கிவரும் ஜெய்ஹிந்த் 2 படம் கல்வியை பின்புலமாகக் கொண்டது. ஆனால் அதுவும் அடிதடி படம்தான்.
 
இந்நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக்கி காதல் படம் ஒன்றை இயக்குகிறார். பட்டத்து யானையில் அறிமுகமான ஐஸ்வர்யாவுக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் மட்டுமின்றி தவறான வாய்ப்புகளும் அமையவில்லை. அதனால் தந்தை அர்ஜுனே படம் தயாரித்து இயக்க வேண்டிய நிலை. மகன்களுக்காக அப்பாக்கள் படம் தயாரிக்கிற கோடம்பாக்கத்தில் மகளுக்காக படம் எடுக்கும் அப்பா.
 
எதுக்கும் இருக்கட்டுமே இப்படியும் ஒரு அப்பா.
 

Share this Story:

Follow Webdunia tamil