Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜையுடன் தொடங்கியது ஜெயம் ரவி, சுராஜ் படம்

Webdunia
திங்கள், 2 ஜூன் 2014 (15:35 IST)
தலைநகரம், மருதமலை, மாப்பிள்ளை, படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன் படங்களை இயக்கிய சுராஜ் அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். லட்சுமி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.
ஜெயம் ரவி தற்போது தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஒரு படமும், ஹன்சிகாவுடன் லக்ஷ்மண் இயக்கத்தில் ரோமியோ ஜுலியட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அவர் நடித்த பூலோகம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
 
இந்நிலையில் அவர் சுராஜ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுராஜின் கடைசிப் படங்கள் - படிக்காதவன், மாப்பிள்ளை - சரியாகப் போகவில்லை. அதன் பிறகு அவர் இயக்கியது அலெக்ஸ்பாண்டியன். கார்த்தியின் கரியரில் மிக மோசமான படமாகவும், தோல்வியாகவும் அது அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் ஏற்படுத்திய பயத்தில் சுராஜ் இயக்கத்தில் நடிக்க பலரும் தயங்கிய நிலையில் துணிச்சலுடன் முன் வந்துள்ளார் ஜெயம் ரவி.
 
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் மிக எளிமையாக நடந்தது. ஜெயம் ரவி, அவரது தந்தை எடிட்டர் மோகன், படத்தின் தயாரிப்பாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

’இந்தியன் 2’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி.. லைகா அதிரடி அறிவிப்பு..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் 69 படத்தின் கேமராமேன் இவர்தான்… இறுதி செய்த படக்குழு!

இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமியின் “வா வாத்தியார்” ஷூட்டிங்… அப்செட்டில் தயாரிப்பாளர்!

Show comments