Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய கெட்டப்புடன் டபுள் பேரலில் நடிக்கும் ஆர்யா

புதிய கெட்டப்புடன் டபுள் பேரலில் நடிக்கும் ஆர்யா
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (16:15 IST)
மலையாள இயக்குனர் லிஜோ‌ பெல்லிசேரியின் டபுள் பேரல் படத்தில் பிருத்விராஜுடன் ஆர்யா நடிக்கக்கூடும் என முன்பு தெரிவித்திருந்தோம். அதனை இயக்குனரும் உறுதி செய்துள்ளார்.
ஆமென் படத்தின் மூலம் மலையாளிகளின் மனம் கவர்ந்த இயக்குனர் லிஜோ‌ அடுத்து டபுள் பேரல் என்ற படத்தை இயக்குகிறார். பிருத்விராஜ், ஃபகத் ஃபாசில், இந்திரஜித் நடிப்பதாக திட்டம். திடீரென ஃபகத் படத்திலிருந்து விலகிக் கொள்ள ஆர்யாவிடம் கால்ஷீட் கேட்டார் லிஜோ‌. அவரும் சம்மதித்துள்ளார்.
 
இதற்கு முன் மலையாள உருமி படத்தில் ஆர்யா நடித்துள்ளார். ஆனால் அது சின்ன வேடம். ஆர்யா படம் நெடுக வரும் முதல் மலையாளப் படமாக டபுள் பேரல் இருக்கும் என லிஜோ‌ தெரிவித்துள்ளார்.
 
தற்போது பிருத்விராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன. கோவாவில் நடக்கும் இரண்டாவது ஷெட்யூல்டில் ஆர்யா கலந்து கொள்கிறார். இந்தப் படத்தில் இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் அவர் தோன்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil