Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாங்காக்கில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி

பாங்காக்கில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி
, வியாழன், 5 ஜூன் 2014 (15:40 IST)
நடிகை அஞ்சலி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பாங்காக்கில் நடந்த தெலுங்குப் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொண்டார்.
அஞ்சலி திடீரென காணாமல் போனதிலிருந்து தொடங்கியது பிரச்சனை. தன்னை நடிகையாக்கிய சித்தி முதற்கொண்டு யாரையும் அவர் விடவில்லை. தன்னை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். இயக்குனர் மு.களஞ்சியத்தின் மீதும் குற்றச்சாட்டு வைத்தார்.
 
இதுஒருபுறம் நடந்து கொண்டிருக்க அஞ்சலி தொடர்ந்து மீடியாவின் பார்வைக்கு வெளியே இருந்து வந்தார். அவர் தனது காதலரை மணந்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
 

கன்னடத்தில் ஒரு படமும் தெலுங்கில் இரு படங்களிலும் நடிக்க அவர் கமிட்டாகியுள்ளார். அதில் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் 20 தினங்கள் நடந்தது. அதில் அஞ்சலி கலந்து கொண்டு நடித்தார்.
webdunia
தமிழிலும் அவருக்கு ஆஃபர்கள் வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் சுராஜ் இயக்கும் படத்தில் அஞ்சலியை நடிக்கக் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தனது தமிழ்ப் படங்களை இறுதி செய்ய சென்னைக்கு அஞ்சலி வரயிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
சுந்தர். சி இயக்கயிருக்கும் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஆசையும் அஞ்சலிக்கு உள்ளது. அதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil