பவித்ரா பாலியல் தொழிலாளியின் கதை. நோய் வாய்ப்பட்ட அம்மாவுக்காக பாலியல் தொழிலுக்கு வருகிறார் ஸ்ரேயா. ஆனாலும் அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகிறது. அந்த விரக்தி மற்றும் கோபத்தில் ஒரு இரவுக்கு ஒரு லட்ச ரூபாய் வசூலிக்கிறார்.
அந்தப் பணத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு உதவிகள் செய்கிறார். இந்நிலையில் ஒரு போட்டோகிராஃபர் பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.
இதற்கிடையில் ஸ்ரேயா மீது எம்எல்ஏ மகனுக்கு காதல். எம்எல்ஏ-வும் சம்மதிப்பது போல் சம்மதித்து இருவரையும் போட்டுத் தள்ளி அந்த சிம்பதியில் தேர்தலில் ஜெயிக்கப் பார்க்கிறார். இப்படி கிளை வ ி ரிந்து செல்லும் இந்தப் படம் 7ஆம் தேதி ஆந்திராவில் வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் ஜனார்த்தன மகரிஷி.
ஸ்ரேயா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் படம் என்ற கொட்டை எழுத்துக்களுடன் இப்படம் தமிழில் எந்நேரமும் வெளியாகலாம்.