கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் 25 வருடங்களுக்கு முந்தைய தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
‘‘25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருந்தார். வெற்றிபெற கடின உழைப்பு தேவைங்கிறதை அப்போது புரிந்து கொண்டேன்.
நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார். அவருக்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.