Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் இரு படங்கள் தயாரிக்கும் ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (12:32 IST)
ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனம் இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கிறது. 20 வயதுள்ள புதுமுகம்தான் ஹீரோ. ரஹ்மானுடன் ஈராஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்தப் படத்தின் கதை ரஹ்மானுடையது. வாழ்க்கை தரும் அனுபவங்களும், பயணங்களில் சந்திக்கிற மனிதர்களும் ஒருவருக்குள் கதைகளை உருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் சிறந்ததை படமாக தயாரிக்கிறேன் என தனது இந்திப் படம் குறித்து தெரிவித்துள்ளார் ரஹ்மான்.
 
இந்திப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரே நேரத்தில் இரு படங்களை தயாரிக்கிறார். இந்த இரண்டுக்கும் ரஹ்மானே கதை எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் யார் என்பது பிறகு அறிவிக்கப்படும்.
 
கதாசிரியர்... தயாரிப்பாளர்... அடுத்த இயக்குனர்? ம்ஹும்... அப்படியொரு ஆசை இசைப் புயலுக்கு இல்லையாம். இயக்கம் என்பது பெரிய பொறுப்பு. அதனை என்னால் சுமக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
காலம் அந்த வலிமையையும், நேரத்தையும் புயலுக்கு வழங்காமலா போகப் போகிறது.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments