ஆறு தேசிய விருதுகள் வாங்கிய ஆடுகளம் குழுவினர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டது.
ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய தனுஷ், சிறந்த எடிட்டிங்குக்கான விருது பெற்ற கிஷோர் மற்றும் தய ா ரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.
தேசிய விருது பெற்ற அவர்களை ஜெயலலிதா வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது ரஜினியின் உடல்நிலை குறித்து தனுஷிடம் ஜெயலலிதா கேட்டுத் தெரிந்து கொண்டார்.