கமல்ஹாசன், மோகன்லால் நடித்திருக்கும் உன்னைப்போல் ஒருவன் இந்த மாதம் திரைக்கு வருகிறது. கமலின் மகள் ஸ்ருதிஹாசன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தியில் வெளியான எ வெட்னெஸ்டே படத்தை தழுவி உன்னைப்போல் ஒருவன் எடுக்கப்பட்டிருக்கிறது. சக்ரி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழுக்கு ஏற்ப படத்தின் காட்சிகளிலும், வசனங்களிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
எழுத்தாளர் இரா.முருகன் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார். இதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அவர் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர் மனுஷ்யபுத்ரன் முதல் முறையாக உன்னைப்போல் ஒருவனுக்கு பாடல் எழுதியிருக்கிறார்.
ஆகஸ்டு 12 ஆம் தேதி கமலின் பொன் விழா நாளன்று உன்னைப்போல் ஒருவன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போஸ்ட் புரொடக்சன் வேலை காரணமாக அது முடியாமல் போக, வரும் 18ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
கந்தசாமி படத்தின் சென்னை உரிமையை வாங்கிய அபிராமி ராமநாதன் உன்னைப்போல் ஒருவனின் சென்னை உரிமையையும் வாங்கியிருக்கிறார்.