Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடிவாரண்ட்

செக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடிவாரண்ட்
, செவ்வாய், 8 அக்டோபர் 2013 (11:29 IST)
FILE
முன்னாள் நடிகையும், தயாரிப்பாளருமான ஜீவிதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஹைதராபாத் கோர்ட் பிறப்பித்துள்ளது.

ஜீவிதா நடிகர் டாக்டர் ராஜசேகரை மணந்து கொண்டபின் நடிப்பதை நிறுத்தினார். ராஜசேகரின் சில படங்களை தயாரித்துள்ளார். இவர் பரந்தாமரெட்டி என்பவரிடம் 34 லட்சங்கள் கடனாக வாங்கியதாக தெரிகிறது.

3 மாதத்தில் திருப்பித் தருவதாக கூறியவர் இதுவரை பணத்தை செட்டில் செய்யவில்லை. மேலும் ஜீவிதா தந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. அதனைத் தெர்டர்ந்து கோர்ட்டுக்கு சென்றார் பரந்தாமரெட்டி.

கோர்ட் இரண்டுமுறை ஜீவிதாவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இருமுறையும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஹைதராபாத் கோர்ட் பிறப்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil