Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்ரனை சிங்கராக்கிய பார்த்திபன்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (19:08 IST)
சிம்ரன் எப்போது சினிமாவுக்கு வந்தார்...? சிம்ரனுக்கே மறந்திருக்கும். அவர் சினிமாவுக்குள் பிரவேசித்தவேளை, நான் நடிக்க வரலை, பாடத்தான் வந்தேன் என்று ஏதோவொரு அசமந்தமான வேளையில் கூறியிருக்கிறார். அதுக்கென்ன இப்போ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது.
சிம்ரனே மறந்துவிட்ட அந்த சிங்கர் மேட்டரை மறக்காமல் நினைவு வைத்து தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் சிம்ரனை பாட வைத்துள்ளார் பார்த்திபன்.
 
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு மார்க்கமாகதான் தயாராகி வருகிறது. படத்தில் கதையே இல்லையாம். இந்த கதையில்லா படத்தில் சம்பளமில்லாமல் விஜய் சேதுபதி, ஆர்யா, அமலா பால் ஆகியோர் நடித்துத் தந்திருக்கிறார்கள். நஸ்ரியா நசீமுக்கும் ஒரு கதாபாத்திரம் வைத்திருக்கிறார் பார்த்தி. அவரை மனதில் வைத்து உருவாக்கியது, கல்யாண நெருக்கடியில் அவர் நடிக்க மறுத்தால் அந்த கதாபாத்திரத்தையே தூக்கிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
 
இப்படி நாளொரு நட்சத்திரமும், பொழுதொரு வியப்புமாக தயாராகும் படத்தில் சிம்ரனை பாட வைத்து அவரின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார்.
 
இந்தப் படத்துக்கு மலையாளியான அல்போன்ஸ் இசையமைக்க பாடல் தொழில்நுட்ப வல்லுனர் மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments