Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு, செல்வராகவன் படத்துக்கு வசனம் எழுதும் ஜெயமோகன்

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (12:31 IST)
சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
அங்காடித்தெரு, நான் கடவுள், சிந்துசமவெளி, நீர்ப்பறவை, கடல் உள்பட பல படங்களுக்கு ஏற்கனவே ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஏழாம் உலகம் நாவலை அடிப்படையாக வைத்தே நான் கடவுள் படம் எடுக்கப்பட்டது. கடல் படத்தின் வசனத்துடன் கதை, திரைக்கதையிலும் ஜெயமோகன் பங்களிப்பு செலுத்தினார்.
 
வரும் 25 ஆம் தேதி தொடங்கயிருக்கும் செல்வராகவனின் படத்துக்கும் ஜெயமோகனே வசனம் எழுதுகிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பது த்ரிஷா. இசை யுவன். மது அம்பட் ஒளிப்பதிவு.
 
படத்துக்கு அலைவரிசை என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
(சிம்பு, த்ரிஷn முதலில் இணைந்து நடித்து அட்டர் ப்ளாப்பான படத்தின் பெயர் அலை என்பது குறிப்பிடத்தக்கது)
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments