அதிமுக அரசின் நில அபகரிப்பு மீதான அதிரடி நடவடிக்கையால் தமிழ் திரையுலகிலும் அதிக பாதிப்பு. சமீபமாக சிக்கலில் மாட்டியிருப்பது அமீரின் ஆதிபகவான்.
ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து வரும் இந்தப் படத்தை தயாரிப்பவர் திமுக சென்னை நிர்வாகிகளில் ஒருவரான ஜெ.அன்பழகன். இவர் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டு போலீஸால் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கு என்பது காலை சுற்றிய பாம்பு. கடிக்குதோ இல்லையோ கொஞ்ச காலத்துக்கு தூக்கத்தை கெடுத்துவிடும். இந்த தொல்லைக்கு நடுவில் படம் தயாரிப்பது எப்படி?
75 சதவீதம் முடிந்திருக்கும் ஆதிபகவான் தடுமாறி நிற்கிறது. விரைவில் படம் வேறு கைக்கு மாறிவிடும் என்று நம்பிக்கை மணி அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.