நடிகைகள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்தளவுக்கு இவர்கள் பேச்சில் அநியாயத்துக்கு கலப்படம்.
தமிழில் ஃபீல்ட் அவுட்டான சாயா சிங் வங்காள மொழியில் ஒரு படத்தை இயக்கி நடிக்கயிருப்பதாகவும், இனி தொடர்ந்து படம் இயக்குவேன் என்றும் தெரிவித்து முழுதாக ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் பெட்டிப் படுக்கையுடன் சென்னையில் லேண்டாகியிருக்கிறார். சின்னத்திரையில் நடிக்கதான் இந்த ரிட்டர்ன்.
விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நாகம்மா தொடரில் இவர்தான் நாயகியாம்.
அப்படியானால் வங்காளம்... இயக்கம்...?
மீண்டும் முதல்வரியை படித்துக் கொள்ளுங்கள்.