பழசிராஜா படத்தில் மம்முட்டியை விட சரத்குமாருக்குதான் அதிக புகழ், பாராட்டு. பல விருதுகளும் கிடைத்தன. இந்த வரவேற்பு சரத்குமாரே எதிர்பார்க்காதது. அவரை மலையாளப் படத்தில் நடிக்க வைக்க சேட்டன்கள் ஆர்வமாக உள்ளனர். அதே ஆர்வம் சரத்துக்கும் உள்ளது.
ஓரிடத்தொரு போஸ்ட்மேன் என்ற படத்தில் நடிக்க சரத் ஒப்புக் கொண்டிருக்கிறார். யாசின் முபாரக் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். வன விலங்குகளை புகைப்படம் எடுக்கும் போட்டோகிராஃபராக இதில் சரத்துக்கு ரொம்பவே வித்தியாசமான வேடம்.
குஞ்சாகோ போபன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அர்ச்சனா கவி, மீரா நந்தன். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.