Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரணின் செந்தட்டிகாளை செவத்தகாளை பெயர் மாறியது

சரணின் செந்தட்டிகாளை செவத்தகாளை பெயர் மாறியது
, வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:01 IST)
இயக்குனர் சரண் வினய் நடிப்பில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்க உள்ளார். பரத்வாஜ் இசை. வினய்க்கு இரு வேடங்கள்.
 
தயாரிப்பில், இயக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சரண் நீண்ட நாள்களுக்குப் பின் செந்தட்டிகாளை செவத்தகாளை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வினய் இரு வேடங்களில் நடிக்கும் அப்படத்தின் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. 
அறிவிப்பு வெளியாகி ஒரு வருடகாலம் ஆகப்போகிறது. சரண் நினைத்தபடி அப்படம் டேக்ஆஃப் ஆகவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை சரண் இயக்க உள்ளார். செந்தட்டிகாளை செவத்தகாளை படத்தைதான் ஆயிரத்தில் இருவர் என பெயரை மாற்றி எடுக்க உள்ளார் சரண்.
 
ஒரு படம் அண்டர் புரொடக்சனில் அதிகநாள் இருந்தால் பழைய படம் என்பதான தோற்றம் வரும். அதனை களைய அதே படத்துக்கு புதிய பெயர் வைப்பது சகஜமான ஒன்று. செந்தட்டிகாளை செவத்தகாளை அறிவித்து அதிக நாள்கள் ஆனதால் படத்தின் பெயரை ஆயிரத்தில் இருவர் என சரண் மாற்றியுள்ளார்.
 
டிசம்பர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என கூறியுள்ளனர். இனியொருமுறை பெயரை மாற்றும் நிலை சரணுக்கு வராதிருக்கட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil