Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவிடம் கதை சொல்லப் போகிறேன் - விஜய் மில்டன்

சமந்தாவிடம் கதை சொல்லப் போகிறேன் - விஜய் மில்டன்
, வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:12 IST)
கோலிசோடா படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டனின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தயார். விஜய் மில்டன் தேர்வு செய்திருப்பது விக்ரம்.
விஜய் மில்டனின் அடுத்தப் படத்தில் விக்ரம் நாயகன். ஃபாக்ஸ் ஸ்டார், த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. நாயகி சமந்தா என கோடம்பாக்கத்தில் பேச்சு.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த விஜய் மில்டன், சமந்தாவிடம் இனிதான் கதை சொல்லப் போகிறேன். அவருக்கு கதை பிடிக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
webdunia
சமந்தா லிங்குசாமி தயாரித்து இயக்கும் அஞ்சானில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் கோலிசோடா வெளியானது. படத்தை வெளியிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் என்பதால் உடனே படத்தைப் பார்த்து படம் அருமையாக உள்ளது என்று தனது கருத்தையும் கூறியிருந்தார்.
 
விஜய் மில்டனின் படத்தை ஏற்கனவே பாராட்டியவர் என்பதால் அவரது இயக்கத்தில் சமந்தா கண்டிப்பாக நடிக்க சம்மதிப்பார் என்பது இங்குள்ளவர்களின் ஆருடம்.
 
பார்ப்போம், சமந்தா என்ன சொல்கிறார் என்று.
 

Share this Story:

Follow Webdunia tamil