Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிந்த் யாருன்னே தெரியாது - சீறிய ப்ரியாமணியின் அம்மா

Webdunia
புதன், 2 ஜூலை 2014 (12:01 IST)
நான் ஒருவரை காதலிக்கிறேன், அவர் யார் என்பதை நேரம் வரும்போது சொல்வேன் என்று ப்ரியாமணி எப்போது சொன்னாரோ அப்போதே பிடித்தது சனி. அவர் யாருடன் பேசினாலும், போட்டோ எடுத்துக் கொண்டாலும் ப்ரியாமணி சொன்ன அவர் இவராக இருப்பாரோ என்று எல்லோருக்கும் ஓர் ஐயம்.
சமீபத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா ப்ரியாமணியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கோவிந்த் பத்மசூர்யாதான் ப்ரியாமணியின் காதலர் என்று ஒரே புகைச்சல். 
 
கோவிந்த் பத்மசூர்யா அப்படியொன்றும் பெரிய நடிகர் கிடையாது. அடையாளம், பூமி மலையாளம், டாடி கூல் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவரை ப்ரியாமணி காதலிப்பதற்கான வாய்ப்பு இல்லை. 

இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும்கூட தனியாக எடுத்துக் கொண்டதல்ல. டி ஃபார் டான்ஸ் நிகழ்ச்சியில் ப்ரியாமணி கலந்து கொண்டபோது எடுத்தவை.
ஆனால் இந்த காதல் கிசுகிசுவுக்கு ப்ரியாமணி இதுவரை பதில் கூறாததால் ஒருவேளை வதந்தி உண்மையாக இருக்குமோ என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம்.
 
அதேநேரம் ப்ரியாமணியின் அம்மா, அந்த கோவிந்த் யாருன்னே தெரியாது, என்னுடைய மகள் அந்தாளை காதலிக்கவில்லை என கடுப்பாக விளக்கமளித்துள்ளார். 
 
போட்டோவைவிட ப்ரியாமணியின் அம்மாவின் எரிச்சல்தான் இடிக்கிறது. ஒருவேளை வதந்தி உண்மையாக இருக்குமோ?
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments