Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோச்சடையானில் தீபிகா போட்ட சண்டை - தயாரிப்பாளர் பிரமிப்பு

கோச்சடையானில் தீபிகா போட்ட சண்டை - தயாரிப்பாளர் பிரமிப்பு
, செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (11:24 IST)
கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோன் சண்டைக் காட்சியில் நடித்தது போன்று உலகின் எந்த நடிகையும் நடித்திருக்க மாட்டார் என படத்தின் இணை தயாரிப்பாளரான முரளி மனோகர் கூறியுள்ளார்.
கோச்சடையான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் 3டி படம் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். அப்பா, இரண்டு மகன்கள். அப்பா கோச்சடையானுக்கு இணை ஷோபனா. மகன் ராணாவுக்கு தீபிகா படுகோன். கதைப்படி தீபிகாவுக்கு படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளன. அதில் டூப் போடாமல் அவரே நடித்துள்ளார்.
webdunia
இது குறித்து தனது வியப்பை வெளிப்படுத்திய முரளி மனோகர், தீபிகா படுகோன் சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்தார். கில்பில் படத்தில் உமா துர்மனும், லாரா கிராஃப்டில் ஏஞ்சலினா ஜோலியும் சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தாலும் கோச்சடையானில் அதைவிட சிறப்பாக தீபிகா நடித்துள்ளார். அவரைப் போல் உலகில் எந்தவொரு நடிகையும் சண்டைக் காட்சியில் நடித்திருக்க மாட்டார் என்று புகழ்ந்தார்.
 
கோச்சடையானுக்கு பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகள் அமைத்தார். அவரும் தீபிகாவின் சண்டைத் திறமையை பாராட்டினார். 
 
மே 9 ஆம் தேதி கோச்சடையான் திரைக்கு வரும் என படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil