சின்ன இடைவெளிக்குப் பிறகு ஆட்ட நாயகன், குள்ளநரிக்கூட்டம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் ரம்யா நம்பீசன் நடித்தாரா என்று கேள்வி கேட்கிற அளவுக்குதான் அவ்விரு படங்களின் வெற்றி அமைந்திருந்தது.
இந்நேரத்தில் பீட்சா வெளியானது. படம் ஹிட். ரம்யா நம்பீசனுக்கும் வாய்ப்புகள் குவிந்தன.
தற்போது ரெண்டாவது படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சி.எஸ்.அமுதனின் இந்தப் படத்தில் விமல் ஜோடியாக காமெடி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் ரம்யா நம்பீசன். அவர் மீதான ஹோம்லி இமேஜை பீட்சா மாற்றியது போல் அவரின் கிளாமர் இமேஜை மாற்றி காமெடி இமேஜை ரெண்டாவது படம் தரும் என நம்புகிறார். இந்தப் படத்திலும் பீட்சா மாதிரியே நெருக்கமான காட்சிகளில் விமலுடன் நடித்துள்ளார்.
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், டமால் டுமீல் படங்களும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவர உள்ளது