Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்துக்குட்டி படத்துடன் ரீ என்ட்ரியாகும் நரேன்

Webdunia
சனி, 21 ஜூன் 2014 (13:33 IST)
சித்திரம் பேசுதடியில் அனைவரையும் கவர்ந்த நரேனுக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மலையாளத்தில் பல படங்கள் நடித்தாலும் அவர் விரும்பும் தமிழில் படங்கள் இல்லாதது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது. கடைசியாக அவரைப் பார்த்தது மிஷ்கினின் முகமூடியில்.
 
சின்ன இடைவெளிக்குப் பிறகு கத்துக்குட்டி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரியாகிறார் நரேன். இது தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.
நரேன் இதுவரை நடித்தப் படங்கள் நகரம் சார்ந்தவை. மலையாளத்திலும் பெரும்பாலானவை நகரம் சார்ந்தவையே. தமிழில் முதல்முறையாக அவர் நடிக்கும் கிராமம் சார்ந்த படம் இது. இந்த கதாபாத்திரத்துக்காக அடர்த்தியான தாடி வளர்த்துள்ளார். அதனால் கத்துக்குட்டி முடிந்த பிறகே அவரால் வேறு படங்களில் நடிக்க முடியும்.
 
சரவணன் இயக்கும் இந்தப் படம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும், தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்புகளை அள்ளிவரும் என்றெல்லாம் நம்பிக்கை வைத்துள்ளார்.
 
தற்போது படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments