Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கதை இரு இயக்குனர்கள்

ஒரு கதை இரு இயக்குனர்கள்
, புதன், 15 செப்டம்பர் 2010 (18:35 IST)
சாமியார் கதையையும், சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையையும் படமாக எடுக்கப் போகிறேன் என்று ராம் கோபால் வர்மா ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

அதன்படி விரைவில் படத்துக்கான நடிகர்களை‌த் தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளார். பல வருடங்கள் முன்பே சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை படமாக்கும் எண்ணத்தில் வீரப்பன் மனைவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குப்பி, காதலர் குடியிருப்பு படங்களை இயக்கிய ரமேஷும் வீரப்பன் கதையை படமா‌க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். வர்மாவைப் போலவே இவரும் இந்தப் படத்துக்காக பல வருடங்கள் தகவல்கள் சேக‌ரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கதையை இருவர் இயக்க ‌பி‌ரியப்படுகிறார்கள். ரேஸில் யார் முந்தப் போகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது திரையுலகம்.

Share this Story:

Follow Webdunia tamil