Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ படத்தை இவர்கள்தான் வாங்கியிருக்கிறார்கள்

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (17:26 IST)
இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடம் ஐ -க்குதான் என்று கண்ணை மூடி சொல்லி விடலாம். படத்தின் வியாபாரமும், படத்தின் டீஸரை இணையத்தில் பார்த்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கையும் அதனை உறுதிப்படுத்துகின்றன.
ஐ - இன் திரையரங்கு உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் பெற்றுள்ளது.
 
ஆந்திராவில் மனோகரடு என்ற பெயரில் ஐ வெளியாகிறது. அதன் திரையரங்கு உரிமையை மெகா சூப்பர் குட் ஃபிலிம்ஸும், திருப்பதி பிரசாத்தும் வாங்கியுள்ளனர். கேரளாவிலும் இதுவரை இல்லாத பெரும் தொகைக்கு ஐ உரிமை விற்கப்பட்டுள்ளது. நேரம் படத்தை தயாரித்தவர்கள் ஐ -இன் கேரள திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உள்ளூர் போலவே வெளிநாட்டு உரிமையை வாங்க கடும் போட்டி. வெளிநாடுகளில் ஹீரோக்கள் தவிர்த்து இயக்குனர்களுக்காக பார்க்கப்படும் படங்கள் என்றால் அது மணிரத்னம் மற்றும் ஷங்கரின் படங்கள்தான். அதனால் வெளிநாடுகளிலும் ஐ பிரமாதமான வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments