Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உற்சாகமளித்த விஜய் பாராட்டு, உப்புமா கம்பெனியை தொடங்கிய பார்த்திபன்

உற்சாகமளித்த விஜய் பாராட்டு, உப்புமா கம்பெனியை தொடங்கிய பார்த்திபன்
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:56 IST)
பல வருடங்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்காக பாராட்டு மழையில் நனைந்தார் பார்த்திபன். பார்த்திபன்னாலே வித்தியாசம் என்பதை விழாக்களில், தரும் பரிசுகளிலும் காட்டியவர் முதல்முறையாக அந்த வித்தியாசத்தை படத்தில் காட்டியது இப்போதுதான். குருநாதர் பாக்யராஜ் முதல் பக்கிரிசாமிவரை பாராட்டதவர்கள் யாருமில்லை.
ஆனால் ஸ்பெஷல் பாராட்டு கிடைத்தது விஜய்யிடமிருந்து.
 
பொதுவாக மீடியா வழியாகவோ, போன் மூலமாகவோ பாராட்டை தெரிவிக்கும் விஜய், பார்த்திபனை மட்டும் நேரில் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 
 
படத்துக்கு நாலா திசைகளிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவு காரணமாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராக உள்ளது. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தால் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான்.
 
இரண்டாம் பாகத்துக்கு உப்புமா கம்பெனி என பார்த்திபன் பெயர் வைத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil