இதோ அதோ என்று உறுமி புதரில் பதுங்கிய புலியாக உறுமிக் கொண்டிருக்கிறதே தவிர இன்னும் வெளியாவில்லை. சந்தோஷ் சிவனின் பதினைந்தாம் நூற்றாண்டுப் படத்தை பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் இருந்தவர்கள் சலிப்படைந்த நிலையில் ஒரு சர்க்கரை செய்தி, உறுமியின் உலக உ ரிமையை தய ா ரிப்பாளர் தாணு வாங்கியிருக்கிறார்.
நல்ல படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி அதனை நல்ல முறையில் வெளியிடும் ஒருசிலரில் தாணு முதன்மையானவர். உறுமியின் குவாலிட்டியால் ஈர்க்கப்பட்ட இவர் பெரும் விலைக்கு படத்தின் உலக உ ரிமையை வாங்கியிருக்கிறார். மற்றவர்கள் என்றால் படத்தை வெளியிடுவதில் மட்டும் அவசரம் காட்டுவார்கள். ஆனால் தாணு ஸ்டைல் வேறு மாத ி ர ி.
உறுமியின் பட்ஜெட் முப்பது கோடி. அதனுடன் மேலும் சில கோடிகளை செலவு செய்து படத்தை மெருகேற்றி வருகிறார். அதேபோல் விளம்பரம். தாணு என்றால் பிரமாண்ட விளம்பரம் என்பதை மீண்டும் உறுமி நிரூபிக்கும் அதற்கும் சில கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இப்படம் கேரளாவில் வாஸ்கோடகாமா கொலை செய்யப்பட்ட நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, வித்யாபாலன், ஜெனிலியா, நித்யாமேனன் என படா படா ஆர்ட்டிஸ்டுகள் நடித்துள்ளனர். சசிகுமரன் தமிழ் வசனங்களை எழுத, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
மிக விரைவில் மிகப் பிரமாண்டமாக உறுமி திரைக்கு வரவுள்ளது.