மகிழ்திருமேனி மீகாமன் என்ற போது எழுந்த அடுத்தக் கேள்விதான், அப்படீன்னா...?
தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனியின் அடுத்தப் படத்தில் ஆர்யாதான் நாயகன். கேரளாவில் நம்பூதிரிகளை திருமேனி என்று அழைக்கிற வழக்கம் உண்டு. மகிழ்திருமேனி நாமகரணம் எப்படி வந்தது?
போகட்டும். அவரின் பெயர்தான் அப்படியென்றால் அவர் இயக்கப் போகிற படத்தின் பெயர் மீகாமன். அயன், ஏகன் இப்போது அனேகன் என்றெல்லாம் பெயர் வைத்து வைத்தவர்களே விளக்கம் தந்த மாதிரி மகிழ்திருமேனியும் ஏதாவது சொல்வார் என்றால் மனிதர் அதுபற்றி வாயே திறக்கவில்லை.
இவர் கௌதம் வாசுதேவ மேனனின் முன்னாண் அசிஸ்டெண்ட். தூய தமிழில் பெயர் வைப்பதை அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டிருப்பார். சரி, மீகாமன் என்பதற்கு என்னதான் விளக்கம்?
தமிழில் மாலுமி என்று அர்த்தம். அப்படீன்னா இதுவும் கடல் சார்ந்த கதையா?
தாங்காதுடா சாமி.